மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதிலிருந்து எல்லா விதத்திலும் நடுநிலையாக செயல்பட்டு வருவதை , பலவிதமான அமைப்புகளும் பாராட்டியுள்ளன .ஊடக நெறியை மீறாமல் உலகத்தமிழர்களின் குரலாக இன்று வரை ஒலித்துக்கொண்டிருக்கிறோம் .
இந்நிலையில் , இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை தொடர்பான உண்மை நிலையை விருப்பு வெறுப்பின்றி தொடர்ந்து எடுத்துரைப்பதால் , இலங்கை இராணுவம் மக்கள் தொலைக்காட்சியை அந்நாட்டில் ஒளிபரப்ப முழுவதுமாக தடை விதித்துள்ளது .
மக்கள் தொலைக்காட்சிக்கு இலங்கையில் ராணுவத்தினர் விதித்துள்ள தடை , உலகளவில் கருத்து சுதந்திரத்திற்கும் , ஊடக சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய கரும்புள்ளி . ஊடக சுதந்ததிரத்தின் குரல் வளையை நெரித்து வரும் இலங்கை அரசின் சர்வதிகார நடவடிக்கையையே இந்த செயல் காட்டுகிறது .
இலங்கையில் தமிழ்ர்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை செய்தியாக வெளிட்ட பத்திரிகையாளர்கள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர் . இனப்படுகொலை செய்திகளை வெளியிட்டதற்காக பி .பி .சி . உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இலங்கையில் தடை விதிக்கிகப்பட்டுள்ளது .
இலங்கையில் அரசு ஜனநாயக பாதையைவிட்டு தடம்மாறி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு ஊடகங்கள் மீதான தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் மக்கள் தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் சான்றாகும் .
இலங்கையில் ராணுவ கட்டுபாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கூடாது என அங்குள்ள கம்பிவட இயக்குனர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது .
இலங்கை அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக அரசியல் தலைவர்களும் , சக ஊடகவியளர்களும் , பொதுமக்களும் தங்கள் கண்டனக் கணைகளை பதிவு செய்ய வேண்டும் . தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் மக்கள் தொலைக்காட்சிக்கும் , ஊடக நெறியைக் காப்பாற்றப்படுவதற்கும் துணை நிற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் .
மக்கள் தொலைக்காட்சிக்காக ,
அ . சிவகுமார் .
முதன்மை செயல் அலுவலர் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
